ஆப்நகரம்

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதர் இவர்தான்!

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள குய் ஜென்ஹோங் சென்று சுய தனிமைக்கு உள்ளாகியுள்ளார்.

Samayam Tamil 1 Nov 2020, 11:42 am
இலங்கைக்கான சீன தூதராக நியமிக்கப்பட்ட குய் ஜென்ஹோங் அக்டோபர் 30ஆம் தேதி இலங்கை சென்றார். இலங்கையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பிசிஆர் பரிசோதனைகளும் அதிகரித்துள்ளன.
Samayam Tamil Chinese Ambassidor


இந்நிலையில் நாட்டிற்கு வருகை தந்துள்ள புதிய சீன தூதர் குய் ஜென்ஹோங் இரண்டு வாரங்களுக்கு சுய தனிமைக்குள்ளாகியுள்ளார்.

இவர் 2017 ஆம் ஆண்டு முதல் சீனாவின் சர்வதேச கல்வி நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டார். 1988 ஆம் ஆண்டு அந்நாட்டு இராஜதந்திர சேவையில் இணைந்துகொண்டார்.

சீன வௌிவிவகார அமைச்சின் கொள்கை வகுப்பு பிரிவில் சேவையாற்றியுள்ள அவர், ஹாங்காங் உள்ளிட்ட சில நாடுகளில் இராஜதந்திரியாகவும் செயற்பட்டுள்ளார்.

கொரோனா பரிசோதனை என கூறி தூக்க மாத்திரைகளை கொடுத்து கொள்ளை!

ஒரு வழி ஒரு திட்டம் உள்ளிட்ட சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் குய் ஜென்ஹோங் விஷேச நிபுணத்துவம் பெற்றவர் என்று கூறப்படுகிறது.

ஒரு வழி ஒரு திட்டத்தை நிறுவி, பல்வேறு துறைகளுக்கு பயன் கிடைக்கும் வகையில், அதனை நடைமுறைப்படுத்துதல் மூலம் இரு நாடுகளினதும் மக்களுக்கு அதிக நன்மைகளைப் பெற்றுக்கொடுப்பதாகவும், சமாதானத்தையும் வளமான பொருளாதார வளர்ச்சியையும் ஏற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் புதிய தூதர் இலங்கை வந்தடைந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக குய் ஜென்ஹோங் விமான நிலையத்தில் இராஜதந்திரி ஒருவருக்கு வழங்கும் வரவேற்பினையும் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி