ஆப்நகரம்

தனிமைப்படுத்துதல் முகாமில் இருந்த கடற்படை அதிகாரிக்கு கொரோனா!!

கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து வீடு திரும்ப இருந்த கடற்படை அதிகாரிக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ள சம்பவம் இவங்கையில் நிகழ்ந்துள்ளது.

Samayam Tamil 24 Aug 2020, 6:03 pm
இலங்கையின் காலி துறைமுகத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் அதிகாரி ஒருவர், கடந்த பிப்ரவரி மாதம் மூன்றாவது வாரத்தில் துபாய் சென்றுள்ளார். தமது இந்த வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு, கடந்த ஜூலை கடைசி வாரம் இலங்கை திரும்பினார்.
Samayam Tamil corona navy


காலி துறைமுகம் வழியாக இலங்கை திரும்பிய அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில், சில தினங்களுக்குமுன், தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து அவரை வீட்டுக்கு அனுப்ப மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதற்குமுன், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிசெய்ய, பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவ அதிகாரிகள், 14 நாள்கள் தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தபோதும், கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள கடற்படை அதிகாரிக்கு மேற்கொண்டு தொடர்ந்து முகாமில் சிகிச்சை அளிக்க பரிந்துரைந்துள்ளனர்.

கொரோனாவை விட அதிக உயிர்பலி: இலங்கையில் அதிகரிக்கும் எலி காய்ச்சல்!

ஒருவருக்கு அறிகுறிகள் இல்லாமல்கூட, பரிசோதனையின்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. அவ்வாறு தொற்று கண்டறியப்படுவோருக்கு தனிமைப்படுத்துதல் முகாமில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், இலங்கையில் தனிமைப்படுத்துதல் முகாமில் இருந்த கடற்படை அதிகாரி ஒருவருக்கே கொரோனா கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி