ஆப்நகரம்

எல்லை மீறி சென்ற கொரோனா: வரும் காலங்களில் அதிகரிக்கும் தொற்று!

கொரோனா பரவல் எல்லை மீறி சென்று விட்டது என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சம்மேளன தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்

Samayam Tamil 20 Jan 2021, 8:06 pm
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உலகின் சில நாடுகளில் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. அதேசமயம், கொரோனா தொற்றும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த நிலையில், பண்டிகை காலங்களில் அதிக ஆபத்துள்ள இடங்களை முடக்குமாறு அல்லது தனிமைப்படுத்துமாறு சுகாதார ஆய்வாளர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியபோதும் அரசாங்கம் அதனை பொருட்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சம்மேளன தலைவர் உபுல் ரோஹன, இப்போது நிலைமை கிட்டத்தட்ட எல்லை மீறிவிட்டது. எனினும் இதற்கான விலையை பொது மக்களே செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தொடர்பாக அரசியல்வாதிகளுக்கு சுகாதார அமைச்சகத்தின் அதிகாரிகள் தவறான செய்திகளை வழங்கி வருகின்றனர். தங்கள் பதவிகளை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் காரணமாக அவர்கள் அவ்வாறு தெரிவித்துள்ளனர். எனவே அடுத்து வரும் வாரங்களில் கொரோனா தொற்று கணிசனமான அளவில் அதிகரிக்கும் என்றும் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

மூன்று வாரத்தில் ரூ.42 கோடி வருமானம்!

உண்மையான கொரோனா நிலை பற்றி அரசியல்வாதிகளை எச்சரிப்பது அதிகாரிகளின் கடமை என்று தெரிவித்துள்ள அவர், கடந்த ஆண்டின் பிற்பகுதியில் மேல் மாகாணத்தில் மட்டுமே வரையறுக்கப்பட்ட கொரோனா தொற்று தற்போது அதிகமான மாவட்டங்களில் பரவியுள்ளது. இது சமூக பரவல் நிலையை சுட்டுக் காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி