ஆப்நகரம்

கொரோனா ஆபத்து; உங்க கூடவே ஒட்டிக்கிட்டு இருக்குதாம் - எப்படி தெரியுமா?

வைரஸ் தொற்று எந்தெந்த பொருட்களில் நீண்ட நாட்கள் இருக்கும் என்று இலங்கை சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Samayam Tamil 17 Oct 2020, 7:30 pm
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது மனிதர்களை தாக்கி நோய் எதிர்ப்பு மண்டலத்தை சக்தியிழக்கச் செய்கிறது. அதேசமயம் நாம் பயன்படுத்தும் பொருட்களிலும் பரவக் கூடியது. எனவே தான் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய பிறகு கை, கால்களை நன்றாக கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்நிலையில் இலங்கை சுகாதாரத்துறை நிபுணர் உத்பலா அமரசிங்க ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். இதன்மூலம் நாம் பயன்படுத்தும் செல்போன், நகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவற்றில் கொரோனா நோய்த்தொற்று நீண்ட காலம் வாழும் என்று கண்டறிந்துள்ளார்.
Samayam Tamil Coronavirus in Sri Lanka


இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய உத்பலா அமரசிங்க, கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளான நபர்கள் மூன்று வாரத்திற்குள் குணமடைய அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு நபருக்குள்ளும் வெவ்வேறு மாதிரி வைரஸ் செயல்படுகின்றது. கொரோனாவிற்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது ஒன்றே வழியாகும். அதேசமயம் கொரோனா பாதிப்பிற்கு ஆளான நபர்களிடம் தென்படும் பாதிப்புகளுக்கு உரிய சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும்.

ஒருவருக்கு கொரோனா... அனைத்து நோயாளிகளும் வெளியேற்றம்!

வைரஸ் தொற்றுக்கு ஆளான நபர்கள் இருமும் போதும், தும்மும் போதும் வெளியாகும் நீர்த்துளிகள் மூலம் பிறருக்கு நோய் பாதிப்பு பரவுகிறது. எனவே முகக்கவசம் கட்டாயம் அணிந்து கொள்ள வேண்டும். இந்த நீர்த்துளிகள் பெண்களின் புடவையில் படும்போது அப்படியே ஒட்டிக் கொள்ளும்.

இதனை சம்பந்தப்பட்ட நபர் தொடும் போது வைரஸ் பரவும் அபாயம் அதிகம் இருக்கிறது. இதேபோல் தான் நகைகள் அணிந்து செல்லும் போதும் காற்றில் மிதந்து வரும் வைரஸ் ஒட்டிக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது. எனவே இவற்றை வெளியிடங்களுக்கு செல்கையில் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி