இலங்கையின் 8ஆவது நாடாளுமன்றத்தை அதிபர் கோத்தபய ராஜபக்சே கடந்த மார்ச் மாதம் கலைத்ததையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தல் இம்மாத தொடக்கத்தில் நடைபெற்றது. அந்த தேர்தலில் வெற்றி பெற்ற ஸ்ரீலங்கா மக்கள் கூட்டமைப்பு கட்சியின் (ஸ்ரீலங்கா பொதுஜன பெராமுன) தலைவர் மகிந்த ராஜபக்சே ஆட்சியைப் பிடித்தார்.
இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி வகிக்கும் நிலையில், பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார். மேலும், அவரது குடும்பத்தினர் முக்கிய துறைகளின் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்தை பொறுத்தவரை 196 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை மூலம் போட்டியிடும் கட்சிகள், மற்றும் சுயேட்சைக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஏனைய 29 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் மூலம் கட்சிகள், மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரப்படி நியமிக்கப்படுகின்றனர்.
இலங்கை அரசை கைப்பற்றிய ராஜபக்சே குடும்பம்!
இதனிடையே, இலங்கை முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு துணை பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. “மைத்ரிபால சிறிசேனவுக்கு துணை பிரதமர் பதவி வழங்கப்படுவது குறித்து கட்சியில் கேட்டறியப்பட வேண்டும். ஆனால், எங்களாது கட்சியில் அதுகுறித்து எதுவும் பேசப்படவில்லை .
தேர்தல் காலத்தில் வாக்குகளை பெறுவதற்காக ஏதாவது கூறியிருப்பார்கள். நிதியமைச்சர் பதவி வழங்கப்படும், அந்த அமைச்ச்சர் பதவி வழங்கப்படும் என கூறி வாக்குகளை பெற்றார்கள். தற்போது பதவிகள் கிடைக்காத போதுதான் பிரச்சினைகள் எழுகின்றன” பொதுஜன பெரமுணவின் தவிசாளரும் கல்வியமைச்சருமான பேராசிரியர் G.L. (காமினி லக்ஸ்மன்) பீரிஸ் கருத்துவெளியிட்டுள்ளார்.
இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி வகிக்கும் நிலையில், பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார். மேலும், அவரது குடும்பத்தினர் முக்கிய துறைகளின் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இலங்கை நாடாளுமன்றத்தை பொறுத்தவரை 196 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை மூலம் போட்டியிடும் கட்சிகள், மற்றும் சுயேட்சைக் குழுக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஏனைய 29 உறுப்பினர்களும் தேசியப் பட்டியல் மூலம் கட்சிகள், மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகளின் விகிதாசாரப்படி நியமிக்கப்படுகின்றனர்.
இலங்கை அரசை கைப்பற்றிய ராஜபக்சே குடும்பம்!
இதனிடையே, இலங்கை முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனவுக்கு துணை பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது. “மைத்ரிபால சிறிசேனவுக்கு துணை பிரதமர் பதவி வழங்கப்படுவது குறித்து கட்சியில் கேட்டறியப்பட வேண்டும். ஆனால், எங்களாது கட்சியில் அதுகுறித்து எதுவும் பேசப்படவில்லை .
தேர்தல் காலத்தில் வாக்குகளை பெறுவதற்காக ஏதாவது கூறியிருப்பார்கள். நிதியமைச்சர் பதவி வழங்கப்படும், அந்த அமைச்ச்சர் பதவி வழங்கப்படும் என கூறி வாக்குகளை பெற்றார்கள். தற்போது பதவிகள் கிடைக்காத போதுதான் பிரச்சினைகள் எழுகின்றன” பொதுஜன பெரமுணவின் தவிசாளரும் கல்வியமைச்சருமான பேராசிரியர் G.L. (காமினி லக்ஸ்மன்) பீரிஸ் கருத்துவெளியிட்டுள்ளார்.