ஆப்நகரம்

குடும்ப வன்முறை... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சாவு

பிரான்சின் நாய்சி லி செக் நகரில் இன்று (அக்.3) காலை நிகழ்ந்த குடும்ப வன்முறையில் இலங்கையர் ஐந்து பேர் மரணமடைந்தனர்.

Samayam Tamil 3 Oct 2020, 10:39 pm
பிரான்சின் நாய்சி லி செக் நகரின் ருரி இமானுவேல் அரகோ வீதியில் உள்ள குடும்பத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வீதியில் உள்ள மதுபான கூடம் ஒன்றுக்கு படுகாயமடைந்த நிலையில் வந்த இளைஞன் ஒருவர் உதவிக்குழுவை அழைக்கும் படி கோரியுள்ளார்.
Samayam Tamil family killing


அத்துடன் அவர்"எனது மாமா என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்துவிட்டார்" என்றும் அந்த இளைஞர் மதுபானக் கூட நிர்வாகியிடம் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், வீடு முழுவதும் ரத்தம் தெறித்திருக்க ஐந்து பேர் சடலமாக வீழ்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மண்ணில் புதையுண்ட ஐந்து மாடிக் கட்டடம்...அதிர்ச்சி சம்பவத்துக்கு என்ன காரணம்?

"சம்பவ இடத்தில் இருந்து கத்தியும், பெரிய சுத்தியலும் மீட்கப்பட்டுள்ளது!" என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் 'கோமா' நிலையில் இருந்ததாகவும், இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும் பிரான்ஸ் போலீஸார் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி