ஆப்நகரம்

10 நாள்களுக்கு ஊரடங்கு: ஆகஸ்ட் 30 வரை இதுதான் நிலைமை!

இலங்கையில் 10 நாள்கள் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 21 Aug 2021, 7:31 am
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இலங்கையில் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
Samayam Tamil sri lanka lockdown


கொரோனா பெருந்தொற்றின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் பல தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தாலும் கொரோனா குறைந்தபாடில்லை.

அடுத்த கட்ட ஊரடங்கு: முதல்வர் அறிவிக்கும் சர்ப்ரைஸ் அறிவிப்புகள்?

இலங்கையில் தற்போது கொரோனா தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு அங்கு 3800 அளவில் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

கொரோனா பரவலைத் தடுக்க மருத்துவ வல்லுநர்கள், மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வணிகர்கள் என பல தரப்பினரும் உடனடியாக ஊரடங்கை அமல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தினால் மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து துறையிலும் ஊழல்: சிக்கப் போவது யார்?
அனைத்து தரப்பு கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் கூடுவது தடுக்கப்படுவதால் நோய் தொற்று பரவும் விகிதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து அத்தியாவசிய தேவைகளும் வழக்கம் போல் இயங்கும் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி