ஆப்நகரம்

பயங்கர வெடிச்சத்தம்... பீதியில் ஆழ்ந்த யாழ்ப்பாண மக்கள்

யாழ்ப்பாணம் பகுதியில் இன்று மதியம் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Samayam Tamil 11 Sep 2020, 6:55 pm
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கு பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வந்தது. அந்த காலக்கட்டத்தில் ர் கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் துப்பாக்கி சத்தம் கேட்பது வழக்கமான நிகழ்வாக இருந்தது.
Samayam Tamil explosion


ஆனால், விடுதலைப்புலிகளுக்கு எதிராக கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிகட்ட போருக்கு பின்னர் இலங்கையில் குண்டு சத்தம் கேட்பது வெகுவாக குறைந்தது.

இந்த நிலையில், யாழ்ப்பாணம் அராலி ராணஉவ முகாம் பகுதியில் இன்று மதியம் திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாக தெரிகிறது. இதனை கேட்ட அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் கடற்படை தளத்தில் தோட்டாக்கள் பறிமுதல்!

ஆனால், ராணுவ முகாமில் இருந்த பயன்பாட்டுக்கு உதவாத வெடிப்பொருட்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், அப்போதுதான் முகாமை சுற்றியுள்ள பகுதிகளில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி