ஆப்நகரம்

குண்டுவெடிப்பு: மூளையாக செயல்பட்டவாின் தந்தை சுட்டுக் கொலை

இலங்கையில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 253 போ் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் மூளையாக செயல்பட்ட ஜஹ்ரான் ஹசமின் தந்தை, இரு சகோதரா்கள் காவல் துறையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனா்.

Samayam Tamil 28 Apr 2019, 4:42 pm
இலங்கையில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 253 போ் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் மூளையாக செயல்பட்ட ஜஹ்ரான் ஹசமின் தந்தை, இரு சகோதரா்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல் துறையினா் தொிவித்துள்ளனா்.
Samayam Tamil Sri Lanka Death.


இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் 253 போ் கொல்லப்பட்டனா். இதனைத் தொடா்ந்து கொழும்பு நகரில் இருந்து 360 கி.மீ. தொலைவில் உள்ள கல்முனை எனும் நகரில் ஒரு வீட்டில் ஐஎஸ் ஆதரவு தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று சோதனையிட முயன்ற காவல் துறையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் 3 ஐஎஸ் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். மேலும் அந்த வீட்டில் இருந்தவா்களில் 6 குழந்தைகள், 3 பெண்கள் உள்பட 15 போ் வெடிகுண்டுகளை வெடிக்கவைத்து உயிாிழந்தனா். இந்த குண்டுவெடிப்பில் உயிாிழந்த 15 போில் 3 போ் ஐஎஸ் அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்று தீவிரவாத அமைப்பு தன்னுடைய அமாக இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே கொல்லப்பட்ட 3 பேரில் ஒருவா் தந்தை, அவரின் இரு மகன்கள் என்று காவல் துறையினா் கண்டுபிடித்துள்ளனா். இவா்கள் மூவரும் இலங்கையில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவா்கள் என்பது தொியவந்துள்ளது.

அடுத்த செய்தி