ஆப்நகரம்

அதிபர் உரையின்போது நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்ந்த பகீர் சம்பவம்!!

இலங்கை அதிபர் கோத்தய ராஜபக்சே நாடாளுமன்றத்தில் உரையாற்றி கொண்டிருந்தபோது, அந்த வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 23 Aug 2020, 12:10 am
இலங்கை நாடாளுமன்றத்துக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சே தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பிரதமராக பதவியேற்று கொண்டபின், முதல்முறையாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 20) தொடங்கியது.
Samayam Tamil srilanka campus


கூட்டத்தொடரை தொடக்கிவைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே பேசிக்கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் தாங்கள் து ரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால், விபரீதம் எதுவும் ஏற்படவில்லை என்று நாடாளுமன்ற பணியாளர்கள் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற ஊழியர் ஒருவர், தான் கிகரெட்டை புகைத்துவிட்டு அதனை சரியாக அணைக்காமல், அந்த வளாகத்தில் உள்ள பிளாஸ்டிக் குப்பை தொட்டியில் போட்டதனால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக நாடாளுமன்ற அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மீனவர்களுக்கு இலங்கை அதிபர் பகிரங்க எச்சரிக்கை!!

இந்த விபத்துக்கு காரணமான ஊழியர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காலை உணவுக்கு பிறகு நாடாளுமன்ற வளாகத்தில் சில ஊழியர்கள் சிகரெட் புகைக்கும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி