ஆப்நகரம்

வானிலிருந்து கொட்டிய மீன் மழை: அள்ளிச் சென்ற மக்கள்!

இலங்கையில் மீன் மழை பெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Dec 2020, 1:45 pm
இலங்கை மஹியங்கனை பிரதேசத்தில் நேற்று மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Fish rain


அந்த பகுதியில் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவிவந்த நிலையில் திடீரென பெய்த மழையின் போது மழை நீருடன் மீன்களும் விழுந்துள்ளன.

மழையோடு சிறிய புயல் காற்று வீசக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்?: தளபதி 65 க...
சிறிய புயல் காற்று நீர் நிலைகளுக்கு அருகில் செல்லும் போது ஓர் சிறிய வால் போன்றதொன்று உருவாகும் என கூறப்படுகிறது. அதன் வழியாக நீர் உறிஞ்சப்பட்டு மேகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என அவர் கூறினார்.

அப்போது நீருடன் மீன்களும் மேகத்துக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் மழை பெய்யும் போது நீருடன் மீன்களும் வந்து விழும் என கூறப்பட்டுள்ளது.
அதிமுக அமைச்சர்கள் மீது இத்தனை ஊழல் புகார்களா? ஆதாரம் திரட்டிய ஸ்டாலின்
மஹியங்கனை பிரதேசத்தில் சிலர் 30 முதல் 35 கிலோ வரை மீன்களை அள்ளிச் சென்றனர்.

அடுத்த செய்தி