ஆப்நகரம்

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது மகிழ்ச்சி: இலங்கை அமைச்சர் சர்ச்சை பேச்சு!

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 28 Oct 2020, 10:29 pm
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வதும், மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய, மாநில அரசுகள் தலையீட்டால் அவர்கள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். எனினும் மீனவர்களின் பிரச்னைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
Samayam Tamil டக்ளஸ் தேவானந்தா
டக்ளஸ் தேவானந்தா


ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 600க்கும் கூடுதலான படகுகளில் வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசிக் கண்மூடித்தனமாகத் தாக்கினர். சிங்களப் படையினரின் தாக்குதலில் இரு மீனவர்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர். பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் சேதம் அடைந்துள்ளன.

கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ள இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, திமுக பொருளாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: மத்திய அமைச்சருக்கு திமுக கடிதம்!

இந்த நிலையில், தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இலங்கை அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பான பிரச்சினைக்கு சமரச தீர்வை காண்பதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற பொறுப்பற்ற முறையில் பேசியுள்ள டக்ளஸ் தேவானந்தாவுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

அடுத்த செய்தி