ஆப்நகரம்

விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்பு உடைக்கப்பட வேண்டும்: கோத்தபய வலியுறுத்தல்

விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்பு உடைக்கப்பட வேண்டும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Samayam Tamil 24 Sep 2020, 7:48 pm
ஐக்கிய நாடுகள் சபையின் நிகழ்ச்சி காணொலிக்காட்சி மூலம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பேசியது:
Samayam Tamil rajapaksa


பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் கடந்த முப்பது ஆண்டுகளாக அனுபவித்த நிலையில், இலங்கை மண்ணிலிருந்து பயங்கரவாதம் தற்போது அகற்றப்பட்டுள்ளது. எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறது.

தமது சித்தாந்தத்தை அந்த அமைப்பு தொடர்ந்தும் பேணி வருகின்ற நிலையில் இலங்கைக்கு எதிராக ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளையும் பரப்பி வருகிறது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு சர்வதேச நாடுகள் இலங்கைக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

நட்புறவை விரிவாக்க ஆர்வமாக இருக்கிறேன்: மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி பதில்!

தற்கொலை தாக்குதலை அறிமுகப்படுத்திய விடுதலைப் புலிகளின் சித்தாந்தம் இன்று உலகம்; முழுவதும் பயங்கரவாத செயல்களுக்கு முன்னுதாரணமாக அமைத்துள்ளது.

போரின் வலியை அனுபவித்த தேசமான இலங்கை, உலகம் முழுவதும் அமைதியை வளர்ப்பதில் உறுதியாக இருப்பதாகவும், ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பதாகவும் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறினார்.

அடுத்த செய்தி