ஆப்நகரம்

சுற்றுலாப் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: இலங்கையில் மீண்டும் விமான சேவை!

இலங்கையில் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு தேவையான பரிந்துரைகளை தயாரிப்பதற்கு சிறப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 5 Dec 2020, 2:45 pm
இலங்கையில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபை, சுகாதார அமைச்சகம் மற்றும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சக செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil sri lanka tourism


இந்த சிறப்பு குழு இலங்கையில் சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு தேவையான பரிந்துரைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சிறிபால ஹெட்டியாரச்சி குறிப்பிட்டார்.

இலங்கை சிறையில் உள்ள கைதிகளுக்கு முக்கிய சோதனை: அரசு அதிரடி!

சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தைத் திறப்பதில் உள்ள நடைமுறை பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் எனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் கூறினார்.

அதே சமயம் இலங்கையில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் பண்டிகை காலத்தில் மாவட்டங்களுக்குள்சுற்றுலாக்களை வரையறுக்காவிடில் கொரோனா தொற்று அதிகரிக்கக்கூடும் என சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி