ஆப்நகரம்

இலங்கையில் கடும் மழை: பாராளுமன்றம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்

இலங்கை தலைநகர் கொழும்பை ஒட்டிய பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால், அந்நாட்டின் பாராளுமன்றம் மழை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 24 May 2018, 10:35 pm
இலங்கை தலைநகர் கொழும்பை ஒட்டிய பகுதிகளில் கடும் மழை பெய்து வருவதால், அந்நாட்டின் பாராளுமன்றம் மழை வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil srilanka-parliment-cover-pic
கடுமழையால் இலங்கை பாராளுமன்றம் மூழ்கும் ஆபத்து


தொடரும் மழை காரணமாக இலங்கை பாராளுமன்றம் அமைந்துள்ள தியவன்னா ஒயாவின் பகுதியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் அந்நாட்டின் பாராளுமன்ற பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் பலர் அதிகரித்து வரும் நீர்மட்டத்தை கட்டுப்படுத்த ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வெள்ள நிலைமை ஏற்பட்டால் அதற்கு முகாம் அமைத்து மக்களுக்கு உதவும் வகையில் கடற்படையினர் அந்த பகுதியில் தயார் நிலையில் உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்