யாழ்ப்பாணம் கொழும்புத் துறை பகுதியில் ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் இன்று மதியம் கிடைத்தது.
இதனையடுத்து, அங்கு விரைந்த மதுவிலக்கு பிரிவு போலீசார், ஹெராயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த 18 வயது இளம்பெண்ணை கைது செய்தனர்.அவரிடமிருந்து 185 மில்லிகிராம் அளவுள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுவிலக்கு பிரிவு பொறுப்பதிகாரி ரகுநாதன் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவினர் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டு ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா பயிரிட அனுமதி... இலங்கை அரசிடம் மருத்துவர் சங்கம் கோரிக்கை!
அண்மை காலமாக, யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் ஹெராயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் முப்படையினர் மற்றும் மதுவிலக்குப் பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, அங்கு விரைந்த மதுவிலக்கு பிரிவு போலீசார், ஹெராயின் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த 18 வயது இளம்பெண்ணை கைது செய்தனர்.அவரிடமிருந்து 185 மில்லிகிராம் அளவுள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுவிலக்கு பிரிவு பொறுப்பதிகாரி ரகுநாதன் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவினர் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டு ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா பயிரிட அனுமதி... இலங்கை அரசிடம் மருத்துவர் சங்கம் கோரிக்கை!
அண்மை காலமாக, யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் ஹெராயின் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் முப்படையினர் மற்றும் மதுவிலக்குப் பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.