ஆப்நகரம்

இலங்கை: கொரோனா வார்டுகளாக மாறும் மருத்துவமனைகள்!

இலங்கையில் கொரோனா தடுப்பு பணிகள் வேகமெடுத்துள்ளன.

Samayam Tamil 19 Oct 2020, 8:46 pm
கொரோனா தொற்றுக்கு ஆளாகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக பிரதேச மருத்துவமனைகளையும் கொரோனா நோயாளர்களுக்கு பயன்படுத்த இலங்கை சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
Samayam Tamil covid 19 in srilanka


கொரோனா பாதிப்பு தற்போது இலங்கையில் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் கொரோனாவுக்கு பிரத்யேக மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டது போல பிற மருத்துவமனைகளும் கொரோனா சிறப்பு மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன. அதே போல் இலங்கையிலும் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

மக்களுக்கு தரமான கடல் உணவுகள் கிடைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு!

இந்த மருத்துவமனைகளை கொரோனா நோயாளர்களுக்கு ஏற்றாற் போல மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், தற்போது 19 பிரதேச மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா ஆபத்து; உங்க கூடவே ஒட்டிக்கிட்டு இருக்குதாம் - எப்படி தெரியுமா?

எனினும், இந்த நிலை குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சிறப்பு மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி