ஆப்நகரம்

இலங்கையில் கானல் நீராகும் தமிழர்கள் எதிர்பார்ப்புகள்!

பெளத்த படிப்பினைகளை பின்பற்றியே ஆட்சி செய்வேன் என்று அந்நாட்டு அதிபர் கோட்டபய ராஜபக்சே தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 5 Feb 2021, 9:48 pm
இலங்கையில் போர் நிறைவடைந்து கடந்த பத்து ஆண்டுகளில் வடக்கு, கிழக்கை இராணுவ மையமாக்கி வரும் இலங்கை அரசு தமிழ் மக்களின் கலாசாரப் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வடக்கு, கிழக்கு பூர்வீகக் குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காகப் பல வகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
Samayam Tamil கோட்டபய ராஜபக்சே
கோட்டபய ராஜபக்சே


மேலும், இஸ்லாமிய மக்களின் மத ரீதியான பாரம்பரிய சமய சடங்கான ஜனாஸாக்களைப் புதைக்கும் செயற்பாடுகளை இல்லாமல் செய்து ஜனாஸாக்கள் எரியூட்டப்பட்டு வருகின்றன. இதற்கு எதிராகப் போராடும் முஸ்லிம் சமூகத்தையும் அரச தரப்பினர் அடக்கி ஆள முனைவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கை ஒரு சிங்கள நாடு. பெளத்த படிப்பினைகளை பின்பற்றியே ஆட்சி செய்வேன் என்று அந்நாட்டு அதிபர் கோட்டபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற சுதந்திர தின உரையின் போது, தாம் ஒரு சிங்கள தலைவன். அந்த அடிப்படையில்தான் ஆட்சி செய்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை: வெற்றிகரமாக முடிந்த 2ஆம் நாள் போராட்டம்!

இலங்கை அதிபரின் இந்த அறிவிப்பு தமிழர்கள், தமிழ் முஸ்லிம்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், தமிழர்களுக்கு சம அதிகாரம், உரிமை கிடைக்கும் என்பன போன்ற எதிர்பார்புகளை கானல் நீராக்கியுள்ளது. இந்த சுதந்திர விழாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கேற்காமல் புறக்கணித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி