ஆப்நகரம்

முன் வைத்த காலை பின்வைக்க மாட்டேன்: கோட்டபய ராஜபக்சே திட்டவட்டம்!

முன் வைத்த காலை பின்வைக்க மாட்டேன் என்று இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்சே திட்டவட்டம் தெரிவித்துள்ளார்

Samayam Tamil 1 Sep 2020, 9:22 pm
உள்நாட்டு விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் காரணமாக இலங்கையில் மஞ்சள் உள்ளிட்ட சில நுகர்வு பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. விலையை கட்டுப்படுத்துவதற்கு அல்லது குறைப்பதற்கு மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்தால் எதிர்பார்த்த இலக்கை நோக்கி செல்ல என்று தெரிவித்த அதிபர் கோட்டபய ராஜபக்சே, குறுகிய கால கஷ்டங்கள் ஏற்பட்டாலும் கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கையில் இருந்து பின்னோக்கி செல்ல மாட்டேன். எடுத்த தீர்மானங்களை நிலையான கொள்கையிலிருந்து செயல்படுத்தி வாழ்க்கைச் செலவை குறைப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Samayam Tamil கோட்டபய ராஜபக்சே
கோட்டபய ராஜபக்சே


ஜனாதிபதி அலுவலகத்தில் வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை கூட்டத்தின் முதலாவது கூட்டத்தில் அதிபர் கோட்டபய ராஜபக்சே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த கூட்டத்தில், சில அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளதால் நகர மத்திய தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கிராமப்பகுதி விவசாயிகள் நிலையான போதிய வருமானத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் தமது விளைச்சலுக்கு உயர்ந்த விலை மற்றும் நிலையான சந்தை வாய்ப்பு உள்நாட்டில் இருக்கின்றது என்ற நம்பிக்கையை அவர்கள் உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் கிராம மக்களை விவசாயத்துக்கு ஊக்கப்படுத்த முடியாது என்று குறிப்பிட்ட கோட்டபய ராஜபக்சே, இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதன் கஷ்டத்தையும் அப்போது சுட்டிக்காட்டினார்.

வறுமையை ஒழிக்க இலங்கை அரசு புதிய திட்டம்!

குறைந்த வருமானமுடையவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டே ஒரு லட்சம் வேலைவாய்ப்பு திட்டத்தின் செயல்படுத்தப்பட்டுள்ளது. கிராம மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதும், நகர மக்களை வாழ்க்கைச் செலவு சுமையிலிருந்து விடுவிப்பதும் ஒருசேர நடக்க வேண்டும் என்றும் கோட்டபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். வாரத்திற்கு ஒரு தடவை சந்தை நிலைமைகள் தொடர்பாக தனக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அப்போது அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அடுத்த செய்தி