ஆப்நகரம்

சட்டவிரோத விவகாரத்தில் வசமாக சிக்கிக் கொண்ட தமிழர்கள் - கெடு விதித்த மலேசிய அரசு!

சட்டவிரோத குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மலேசிய அரசு கெடு விதித்துள்ளது.

Samayam Tamil 24 Jul 2019, 2:58 pm
இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள், பஞ்சம் பிழைக்க மலேசியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளை நோக்கி செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போது சட்டவிரோதமாக குடியேறுபவர்களும் அடங்குவர்.
Samayam Tamil Malaysia Immigrants


சில நாடுகள் அவர்களை ஆதரவளிக்கும். ஆனால் பல நாடுகள் அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கி, நாட்டை விட்டு வெளியேற்றும் செயலில் ஈடுபடுகின்றன. அந்த வகையில் மலேசியாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருக்கின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த அந்நாட்டு அரசு, பொதுமன்னிப்பு வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, சட்டவிரோத குடியேறிகள் சொந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்திய மதிப்பில் 12 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும்.

இலங்கையில் இஸ்லாமிய பிரபாகரன் உருவாகக்கூடும் – மைத்ரிபால சிறிசேன!

பின்னர் அவரவர் நாட்டு தூதரகங்கள் உதவியுடன் மலேசியாவை விட்டு வெளியேறி விட வேண்டும். மலேசியாவில் குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

இலங்கை குண்டு வெடிப்பில் உருக்குலைந்த தேவாலயத்தில் நரேந்திர மோடி அஞ்சலி

அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக வசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சொந்த நாட்டிற்கு திரும்ப மலேசிய அரசு உத்தரவிட்டுள்ளது.

குண்டுவெடிப்புக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர்கள் கைது!

அடுத்த செய்தி