ஆப்நகரம்

அரபு நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்கள் வெளியேற்றம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் வெளியேறுவதற்கு அந்நாட்டு அரசு கருணைக்காலம் கொடுத்துள்ள நிலையில், அங்கிருந்து 1818 இலங்கையர்கள் நாடு திரும்புகின்றனர்.

Samayam Tamil 26 Aug 2018, 5:05 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் வெளியேறுவதற்கு அந்நாட்டு அரசு கருணைக்காலம் கொடுத்துள்ள நிலையில், அங்கிருந்து 1818 இலங்கையர்கள் நாடு திரும்புகின்றனர்.
Samayam Tamil srilankan_embassy
அரபு நாடுகளிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்


அமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் ‘உங்களது நிலையை திருத்திக்கொள்வதன் மூலம் உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்’ என்ற திட்டத்தின் மூலம் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட இருக்கின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 01ம் தேதி தொடங்கிய இத்திட்டத்தின் கருணைக்காலம் அக்டோபர் 31 வரை உள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இக்காலம், திரும்பிச் செல்ல விரும்பும் வெளிநாட்டினர் திரும்பிச் செல்வதற்கும் அல்லது மீண்டும் முறையாக பதிந்து வேலை செய்ய விரும்புவர்களுக்கும் சட்டரீதியான ஒரு வாய்ப்பை வழங்குகின்றது.

இலங்கையை பொறுத்தமட்டில், 125,000 இலங்கையர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் ஆண்டுதோறும் 30,000 இலங்கையர்கள் அமீரகத்தில் வேலை செய்ய செல்கின்றனர்.

இலங்கையர்களை போன்று இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபால், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் நாடு திரும்பி வருவதாக தெரியவந்துள்ளது.

அடுத்த செய்தி