ஆப்நகரம்

இலங்கைக்கு டூர் போறீங்களா? இதை மறந்துடாதீங்க!

இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் பின்பற்றவேண்டிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Samayam Tamil 26 Dec 2020, 2:12 pm
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களை சுகாதார அமைச்சகம் வௌியிட்டுள்ளது.
Samayam Tamil Sri Lanka tourism


இலங்கையில் இந்த வாரம் முதல் சோதனை அடிப்படையில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கொரோனா காப்புறுதியை பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கும் விடுதியை முன்பதிவு செய்யும்போது அல்லது விமான டிக்கெட்டை பெறும் போது செய்யும்போது காப்புறுதியை பெற வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசுக்கு டோக்கன் வாங்கிட்டீங்களா? முக்கிய தகவல்!

விமான நிலையங்களுக்கு புறப்படுவதற்கு 96 மணித்தியாலங்களுக்கு முன்னர், அங்கு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ கூடங்களில் பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்து இரண்டு வார கால பகுதிக்குள் 3 பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அவையனைத்தும் ஒரே மருத்துவ கூடத்தினால் நடத்தப்பட்டிருக்க வேண்டுமெனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுதாகரன் விடுதலையில் சசிகலா ஆடும் அரசியல் கேம்!

மேலும், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தங்கும் விடுதிகளில் மட்டும் தங்குவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

முதல் இரு வாரங்களில் சுதந்திரமாக நடமாட தடை விதிக்கப்படும் அதேசமயம், தங்கும் விடுதியில் இருந்து வௌியில் செல்லவும் ஒரு வாரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி