ஆப்நகரம்

தமிழர்களை ராணுவம் கொன்று கொவித்தது உண்மைதான்.!

இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில், தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதியளித்துள்ளார்.

TNN 13 Nov 2017, 2:27 pm
இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையில், தமிழர்களை கொன்று குவித்த ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதியளித்துள்ளார்.
Samayam Tamil it is true that the army killed the tamilians srilankan president sirisena
தமிழர்களை ராணுவம் கொன்று கொவித்தது உண்மைதான்.!


இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை இலங்கை இராணுவம் கொன்று குவித்தது. இதுதொடர்பான புள்ளிவிவரங்கள், ஐ.நா. சபையில் அறிவிக்கப்பட்டு, . இலங்கை போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச நீதிவிசாரணை தேவையை வலியுறுத்தி பல்வேறு தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதுவரை இந்த இனப்படுகொலை குறித்து, இலங்கை ராணுவத்தினருக்கு ஆதரவாக பேசிவந்த அதிபர் சிறிசேனா, முதன்முறையாக போர்க்குற்றம் தொடர்பாக இலங்கை ராணுவத்துக்கு எதிராக பகிரங்கமாக பேசியுள்ளார்.

மேலும் அப்போதைய ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக சில ராணுவ வீரர்கள் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர். அதை மனசாட்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். தன் மீதுள்ள கறையை ராணுவம் அகற்ற வேண்டிய நேரம் இது. ராணுவத்தின் கட்டுப்பாட்டை மீறி சில அத்துமீறிய விஷயங்கள் நடந்துள்ளன. அவை ஜனநாயகத்திற்கும் மக்களின் சுதந்திரத்திற்கும் எதிரானதும் சட்டவிரோதமானதும்கூட என்று அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

மேலும் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணை நடைபெற்றுவருவதாகவும் போர்க்குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் நிரபராதிகள் என தெரியவந்தால் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதியளித்துள்ளார்.

அடுத்த செய்தி