இலங்கையின் வானிலை ஆய்வு மையம் மழை பற்றிய முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.
இலங்கையின் பல பகுதிகளில் இன்று 100 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மழையு பெய்து வருவதால், நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உரித்தான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
இராஜாங்கனை, தெதுருஓயா மற்றும் களுகல்ஓயா நீர்த்தேக்கங்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர், பொறியியலாளர் டி. அபேசிறிவர்தன கூறியுள்ளார்.
அத்துடன், மகாவலி அதிகார சபைக்கு உரித்தான கலாவாவி, விக்டோரியா, கொத்மலை, ரந்தெனிகல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலையால் வடக்கு, கிழக்கு மத்திய, வட மேல், ஊவா, வட மத்திய மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளில் வசிக்கும் 2,623 குடும்பங்களை சேர்ந்த 8,021 பேர் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டுளளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். நால்வர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.
இலங்கையின் பல பகுதிகளில் இன்று 100 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மழையு பெய்து வருவதால், நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உரித்தான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
இராஜாங்கனை, தெதுருஓயா மற்றும் களுகல்ஓயா நீர்த்தேக்கங்களில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பணிப்பாளர், பொறியியலாளர் டி. அபேசிறிவர்தன கூறியுள்ளார்.
அத்துடன், மகாவலி அதிகார சபைக்கு உரித்தான கலாவாவி, விக்டோரியா, கொத்மலை, ரந்தெனிகல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற வானிலையால் வடக்கு, கிழக்கு மத்திய, வட மேல், ஊவா, வட மத்திய மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பகுதிகளில் வசிக்கும் 2,623 குடும்பங்களை சேர்ந்த 8,021 பேர் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டுளளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். நால்வர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.