ஆப்நகரம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவேந்தும் தமிழர்கள்!

இலங்கை அரசுப் படையால் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு 30ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

Samayam Tamil 5 Sep 2020, 2:57 pm
இலங்கையில் கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணை என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு உணர்வுப்பூர்வமாக அனுசரிக்கப்பட்டது.
Samayam Tamil tamils


வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாச்சார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு இணைந்து இந்த நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

1990ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இலங்கை அரசப் படையினருக்கும், விடுதலைப் புலிகலுக்கும் இடையே போர் உக்கிரமடைந்திருந்தது. அப்போது உயிர் அபாயம் காரணமாக கிழக்கு பல்கலைக்கழக முகாமில் ஆயிரக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்தனர்.

சரக்கு கப்பல் தீ விபத்தால் இலங்கைக்கு காத்திருக்கும் பேராபத்து... நிபுணர்கள் எச்சரிக்கை

அப்போது அரசுப் படை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 158 பேர் விசாரணை என்று அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அஞ்சலி செலுத்தும் விழா இலங்கையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மாணவர்கள், மதகுருமார்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் இயற்கை எரிவாயு கொள்கைக்கு ஒப்புதல்!

பல்கலைக்கழக வளாகத்தின் முன் பதாகைகளை ஏந்தியவாறு தமது உறவுகளுக்கு நீதி கோரி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உறவினர்கள், மாணவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவு கூர்ந்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

அடுத்த செய்தி