ஆப்நகரம்

மீண்டும் கொரோனா பொது முடக்கம்: அரசு அறிவிப்பு!

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இலங்கையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Oct 2020, 5:09 pm
இலங்கையில் கொரோனா பரவல் ஆரம்பத்தில் குறைவாக இருந்தாலும் கடந்த சில வாரமாக அதிகரித்து வருகிறது.
Samayam Tamil corona lockdown


இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8870 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாளை ( அக்டோபர் 29) நள்ளிரவு 12 மணி முதல் வரும் திங்கட்கிழமை (நவம்பர் 2) அதிகாலை 05 மணி வரை மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

பிற பகுதிகளில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நேற்று மட்டும் 457 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 4043 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

சசிகலா விடுதலை: காகிதம் கர்நாடகாவில், கையெழுத்து டெல்லியில்!

4808 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக அரசு தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது. கொரோனா தொற்றினால் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜா-எல பகுதியைச் சேர்ந்த 42 வயதான ஆண் ஒருவர் , நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த கொழும்பைச் சேர்ந்த 19 வயதான நபர் மற்றும் 87 வயதான பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கொரோனா தொற்றினால் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர்.

அடுத்த செய்தி