ஆப்நகரம்

Mahinda Rajapaksa: இலங்கை பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறார் ராஜபக்சே- நமல் அறிவிப்பு

மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 14 Dec 2018, 10:07 pm
இலங்கையின் பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்‌சே ராஜினாமா செய்யவுள்ளதாக அவரது மகன் நமல் ராஜபக்‌ஷே ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் ராஜபக்சே


இலங்கையின் பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டத்தை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய ஊட்டமைப்பு ஆகியா கட்சிகளின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்‌ஷே அரசுக்கு எதிராக முன்மொழியப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிப்பெற்றுள்ளது. அதனால் அவரது அரசு செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சட்ட விரோதமானது. நான்கரை ஆண்டுகளுக்கு முன்னரே நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. முன்னரே கலைக்க வேண்டும் என்றால் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனால் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லது என நீதிபதிகள் அமர்வு அதிரடி தீர்ப்பு வழங்கியது.



முன்னதாக, இலங்கை பிரதமராக இருந்து வந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு அப்பதவியில் ராஜபக்‌ஷேவை அதிபர் சிறிசேனா நியமித்தார். மேலும், அடுத்த மாதம் இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம் நாடாளுமன்றம் கலைப்பு அடுத்தாண்டு தேர்தல் உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கட்சியால் 3 முறை நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவரபப்ட்டன. அதில் ராஜபக்சே அரசு தோற்றுப்போனது. எனினும் ராஜபக்சே பதவி விலக மறுத்துவிட்டார். இதனால் இலங்கை அரசியில் தொடர்ந்து குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் அதிபர் மைத்ரி பாலசிறிசேனாவின் நாடாளுமன்ற கலைப்பு சட்டவிரோதம் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியிருந்தது.

இந்நிலையில் நாட்டின் ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சே தனது பிரதமர் பதவியை நாளை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பின்னர் அவர் பதவி விலகுவார். இலங்கை மக்கள் கட்சியும், இலங்கை சுதந்திரா கட்சியும், மற்றவர்களுடன் இணைந்து அதிபர் சிறிசேனாவுடன் இணைந்து மிகப் பெரிய கூட்டணியை அமைக்க பாடுபடுவார்கள் என்று நமல் ராஜபக்சே தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி