உலகிற்கே கடும் சவாலாகியுள்ள கொரோனாவினால் ஏற்பட்டுள்ள சர்வதேச சுகாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு உலகின் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவது மிக முக்கியமானது என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பல தலைவர்கள் காணொளி மூலம் இணைந்துகொண்டனர். இதன்போது, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் இணைந்துகொண்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸிற்கு எதிராக போராடுவதற்கு இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை வழங்கிய ஒத்துழைப்பிற்கு இந்நிகழ்வில் ராஜபக்சே நன்றி கூறினார்.
ஐசிஐசிஐ வங்கி இனி இயங்காது: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
“எமக்கும் எமது பிள்ளைகளுக்கும் மிகவும் சிறந்த உலகை உருவாக்குவதற்கு ஐக்கிய நாடுகளின் சாசனத்திலுள்ள இயலுமை தொடர்பில் எமக்கு நம்பிக்கையுள்ளது. அத்துடன், மிகவும் சவாலான இந்த காலப்பகுதியில் உலகத் தலைவர்களை ஒரே தளத்திற்குக் கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உதவியாக உள்ளது. ஆகவே, கூட்டு நாடுகள் என்ற வகையில், இந்தப் பொறுப்பு மிகு தருணத்தில், ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகின்றோம்” என மகிந்த ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இதுவரை 7,354 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. தொற்றுக்குள்ளானவர்களில் 3,714 பேர் குணமடைந்துள்ளனர். 3,424 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பல தலைவர்கள் காணொளி மூலம் இணைந்துகொண்டனர். இதன்போது, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் இணைந்துகொண்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸிற்கு எதிராக போராடுவதற்கு இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபை வழங்கிய ஒத்துழைப்பிற்கு இந்நிகழ்வில் ராஜபக்சே நன்றி கூறினார்.
ஐசிஐசிஐ வங்கி இனி இயங்காது: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
“எமக்கும் எமது பிள்ளைகளுக்கும் மிகவும் சிறந்த உலகை உருவாக்குவதற்கு ஐக்கிய நாடுகளின் சாசனத்திலுள்ள இயலுமை தொடர்பில் எமக்கு நம்பிக்கையுள்ளது. அத்துடன், மிகவும் சவாலான இந்த காலப்பகுதியில் உலகத் தலைவர்களை ஒரே தளத்திற்குக் கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபை உதவியாக உள்ளது. ஆகவே, கூட்டு நாடுகள் என்ற வகையில், இந்தப் பொறுப்பு மிகு தருணத்தில், ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு வழங்கும் என நம்புகின்றோம்” என மகிந்த ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இதுவரை 7,354 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. தொற்றுக்குள்ளானவர்களில் 3,714 பேர் குணமடைந்துள்ளனர். 3,424 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.