இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
இலங்கையில் நேற்று முன் தினம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. கொரோனா காலம் என்பதால் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைப் பின்பற்றி மக்கள்ள் வாக்களித்தனர். நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சி பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றது. இதனால் ராஜபக்சே பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்ற ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ராஜபக்சே ட்விட்டர் வாயிலாக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். “தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்னதுக்கு நன்றி பிரதமர் நரேந்திர மோடி. ஸ்ரீலங்கா மக்களின் வலுவான ஆதரவுடன், நம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்த்திருக்கிறேன். இலங்கையும் இந்தியாவும் நட்புறவுள்ள நாடுகள்” என்று பதிவிட்டார்.
இலங்கை தேர்தல்: மகிந்த ராஜபக்சேவின் கட்சி தொடர்ந்து முன்னிலை!
அந்த ட்வீட்டை பகிர்ந்த மோடி, “உங்களுடன் பேசிய மகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும், வாழ்த்துக்கள். இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து பகுதிகளையும் மேலும் முன்னேற்றுவதற்கும், நம் இரு நாட்டு உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவு அமைச்சகமும் ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இலங்கை தேர்தல்: மகிந்த ராஜபக்சேவின் கட்சி தொடர்ந்து முன்னிலை!
இலங்கையில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களை சிங்களர்கள் ஒடுக்கிவருகின்றனர். எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் இந்த நிலை மாறாமல் இருந்தாலும் நடராஜபக்சே அதிபராக பதவியேற்ற போதுதான் 2009ஆம் ஆண்டு லட்சக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இனப்படுகொலையை சந்தித்த தமிழர்களுக்கு அதற்கான நீதி இன்னும் கிடைக்காத நிலையில் மீண்டும் ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுள்ளது தமிழகர்கள் மத்தியில் அதிருப்தியை மட்டுமல்லாமல் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் நேற்று முன் தினம் பொதுத் தேர்தல் நடைபெற்றது. கொரோனா காலம் என்பதால் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைப் பின்பற்றி மக்கள்ள் வாக்களித்தனர். நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன கட்சி பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றது. இதனால் ராஜபக்சே பிரதமராக பதவியேற்கவுள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்ற ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ராஜபக்சே ட்விட்டர் வாயிலாக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். “தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்னதுக்கு நன்றி பிரதமர் நரேந்திர மோடி. ஸ்ரீலங்கா மக்களின் வலுவான ஆதரவுடன், நம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்பார்த்திருக்கிறேன். இலங்கையும் இந்தியாவும் நட்புறவுள்ள நாடுகள்” என்று பதிவிட்டார்.
இலங்கை தேர்தல்: மகிந்த ராஜபக்சேவின் கட்சி தொடர்ந்து முன்னிலை!
அந்த ட்வீட்டை பகிர்ந்த மோடி, “உங்களுடன் பேசிய மகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும், வாழ்த்துக்கள். இருதரப்பு ஒத்துழைப்பின் அனைத்து பகுதிகளையும் மேலும் முன்னேற்றுவதற்கும், நம் இரு நாட்டு உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கு நாம் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார். மத்திய வெளியுறவு அமைச்சகமும் ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இலங்கை தேர்தல்: மகிந்த ராஜபக்சேவின் கட்சி தொடர்ந்து முன்னிலை!
இலங்கையில் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களை சிங்களர்கள் ஒடுக்கிவருகின்றனர். எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் இந்த நிலை மாறாமல் இருந்தாலும் நடராஜபக்சே அதிபராக பதவியேற்ற போதுதான் 2009ஆம் ஆண்டு லட்சக்கணக்கில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இனப்படுகொலையை சந்தித்த தமிழர்களுக்கு அதற்கான நீதி இன்னும் கிடைக்காத நிலையில் மீண்டும் ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுள்ளது தமிழகர்கள் மத்தியில் அதிருப்தியை மட்டுமல்லாமல் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.