ஆப்நகரம்

இலங்கை மன்னாரில் தோண்ட தோண்ட கிடைத்த மனித எலும்புக்கூடுகள்

இலங்கையில் போர் நடைபெற்ற இடத்தில் 38 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 13 Jul 2018, 3:36 pm
இலங்கையில் போர் நடைபெற்ற இடத்தில் 38 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil mannar-38-skeletons-cover-image
இலங்கை போரில் கொல்லப்பட்ட 38 பேரின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு


இலங்கையில் உள்ள மன்னார் பகுதியில் அந்நாட்டு அரசிற்கும், விடுதை புலிகள் இயக்கத்திற்கும் போர் நடைபெற்ற இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதற்காக குழி தோண்டப்பட்ட போது, மண்ணுக்குள் புதைத்திருந்த 38 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை, எலும்புக்கூடுகளை கைப்பற்றி மன்னார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு எலும்புக்கூடுகள் மீது ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 1983ம் ஆண்டு முதல் 2009 வரை விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கும், இலங்கை அரசு படைக்குகளுக்கு இடையே கடும் போர் நடைபெற்று வந்தது.

தற்போது எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டுள்ள மன்னார் பகுதியில் அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையிலான அரசு படைகளுக்கும் மற்றும் புலிகள் இயக்கத்தினருக்கும் போர் நடைபெற்றுள்ளது.

இலங்கை போரின் போது, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு அவர்களின் உரிமை மறுக்கப்பட்டதாக சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் ராஜபக்சே அரசை குற்றம்சாட்டியுள்ளது கவனிக்கத்தக்கது.

அடுத்த செய்தி