ஆப்நகரம்

13ஆவது சட்டத் திருத்தத்தை வலியுறுத்தும் இந்தியா!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இலங்கைக்கான இந்திய ஸ்தானிகரை சந்தித்துப் பேசியுள்ளனர்.

Samayam Tamil 22 Aug 2020, 8:51 am
இலங்கையில் தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடரும் என இலங்கைக்கான இந்திய ஸ்தானிகர் கோபால் பாக்லே கூறியுள்ளார்.
Samayam Tamil gopal baglay


தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேற்று இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேவை கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்துப் பேசினர். மாலை 5.30 மணியிலிருந்து 7 மணி வரை இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழ்மக்களின் நலன் குறித்து அவர் குறித்து இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது. பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

மேலும் மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்வு செய்யப்பட்டதற்கு கோபால் பாக்லே வாழ்த்துகளைத் தெரிவித்தார். இலங்கையில் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பணியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என அவர் வலிறுத்தினார்.

மீனவர்களுக்கு இலங்கை அதிபர் பகிரங்க எச்சரிக்கை!!

மேலும் 13ஆவது சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இந்தியாவின் நீண்ட கால நிலைப்பாட்டை கோபால் பாக்லே மீண்டும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்திப் பேசினார்.

அடுத்த செய்தி