ஆப்நகரம்

மிலிந்த மொரகொட: உயர் ஸ்தானிகராக பொறுப்பேற்பு!

இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக மிலிந்த மொரகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 31 Aug 2021, 11:28 am
இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர் ஸ்தானிகராக மிலிந்த மொரகொட பொறுப்பேற்றார்.
Samayam Tamil மிலிந்த மொரொகட


இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொரகொட, இந்தியாவில் புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்ற எளிமையான நிகழ்வில் அமைச்சரவை அந்தஸ்துடனான பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.

கடமைகளை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, அங்குள்ள பணியாளர்கள் மத்தியில் உரையாற்றிய மிலிந்த மொரகொட, இலங்கையின் நலன்களை முன்னேற்றுவதற்கும், இலங்கை - இந்திய உறவுகளை புதிய இடத்துக்கு கொண்டு செல்வதற்கும் ஒரு குழுவாக, பணியாற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
செப். 6 முதல் 6 - 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு!
அத்துடன், தனது கொள்கை கட்டமைப்பை அங்கு அறிவித்தார். இலங்கையின் இராஜதந்திர ஒருங்கிணைந்த நாட்டு வியூகம் 2021/2023 என்று, அதனை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மிலிந்த மொரகொட, இந்தியாவுக்கான இலங்கையின் இருபத்தி ஆறாவது உயர்ஸ்தானிகர் ஆவார்.
சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்: அமைச்சர்கள் திக் திக்!
கோட்டா - மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் மிலிந்த மொரகொடவை ஸ்ரீலங்காவிற்கான இந்திய உயர்ஸ்தானிகராக நியமித்துள்ளது தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்பை தூண்டியுள்ளது. இதை எதிர்த்து ஈழத்தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் கண்டன அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி