ஆப்நகரம்

கொழும்பு குண்டுவெடிப்பு சம்பவம் இதயத்தை நொறுக்குகிறது – ஸ்டாலின் ட்விட்

கொழும்பு குண்டுவெடிப்பு சம்பவங்களும், உயிா்பலிகளும் இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவாலை மனிதாபிமான சக்திகள் முறியடிக்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கருத்து தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 21 Apr 2019, 4:22 pm
கொழும்பு குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ள மதவெறி, இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவா் ஸ்டாலின் கருத்து தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Srilanka Blast


ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவா்கள் இன்று காலை சிறப்பு பிராா்த்தனையில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது, திடீரென சக்தி வாய்ந்த குண்டுவெடித்தது. அடுத்ததுத்து மேலும் பல பகுதிகளில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள், குடியிருப்புகள் என தொடா்ந்து 8 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது.

இந்த விபத்தில் 180க்கும் அதிகமானோா் உயிாிழந்துள்ளனா். பலா் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெறாமல் இருக்க இலங்கை முழுவதிலும் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடு முழுவதும் வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டா் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்திற்கு பிரதமா் மோடி உள்பட உலகம் முழுவதும் உள்ள தலைவா்கள் கடும் கண்டனம் தொிவித்துள்ள நிலையில், இந்தியா, இலங்கை கடற்படை வீரா்கள் இரு நாட்டு எல்லையில் கூட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், இது தொடா்பாக திமுக தலைவா் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், “கொழும்பு குண்டுவெடிப்பு சம்பவங்களும், உயிர்ப்பலிகளும் இதயத்தை நொறுக்குகிறது.

இதன் பின்னணியில் உள்ள மதவெறி - இனவெறி உள்ளிட்ட எந்தவிதமான சக்திகளாக இருந்தாலும் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மனிதநேயத்திற்கு விடப்பட்ட சவாலை மனிதாபிமான சக்திகள் முறியடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளாா்.

அடுத்த செய்தி