ஆப்நகரம்

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு: திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி!

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Samayam Tamil 16 May 2022, 4:00 pm
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், கடும் வன்முறை வெடித்துள்ளது. பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே அறிவித்த சில மணி நேரங்களில் ராஜபக்சே ஆதரவரவாளர்களுக்கும் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையே வெடித்த மோதல், நாடு முழுவதும் பரவியுள்ளது. வன்முறையில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
Samayam Tamil இலங்கை ஊரடங்கு
இலங்கை ஊரடங்கு


பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மகிந்த ராஜபக்சே தலைமறைவானதையடுத்து, அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. புதிய அமைச்சரவையை அமைக்கும் முயற்சிகளில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஈடுபட்டு வந்த நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து 15 பேர் கொண்ட அமைச்சரவையும் பொறுப்பேற்கும் என கூறப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

ஆனாலும், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது. அதனை வலியுறுத்தி ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மேலும், ராகபக்சே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

முன்னதாக, வன்முறைகளை கட்டுப்படுத்த கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் இந்த ஊரடங்கு உத்தரவி விரிவுபடுத்தப்பட்டது. மேலும், ஊரடங்கு உத்தரவானது அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நாடு முழுவதுமான ஊரடங்கு தளர்த்தப்படுவதாகவும், இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படுவதாகவும் இலங்கை அரசு அறிவித்தது.

அதிபர் கோத்தபயவுக்கு ஆப்பு வைத்த பிரதமர் ரணில்... இலங்கை அரசியலில் மீண்டும் பரபரப்பு!
இந்த நிலையில், இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த திடீர் அறிவிப்பால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி