ஆப்நகரம்

இலங்கைக்கு மீண்டும் புதிய பிரதமர் !

இலங்கையின் பிரதமரக ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் நியமிக்க வாய்ப்பில்லை என்று அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 14 Dec 2018, 5:55 pm
இலங்கையின் பிரதமரக ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் நியமிக்க வாய்ப்பில்லை என்று அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார்.
Samayam Tamil 00


இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை அதிபர் சிறிசேனா நியமித்ததில் இருந்து இலங்கையில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

இதை ஏற்க மறுத்த ரணில் விக்கிரமசிங்கே, பிரதமர் பதவியிலிருந்து விலகாமல் நாடாளுமன்றத்தை கூடி, பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வலியுறுத்தினார். ஆனால் அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்து, மறுத்தேர்தல் அறிவித்து உத்தரவிட்டார். அதிபரின் இந்த முடிவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் நாடாளுமன்றத்தை கலைக்க இடைக்கால தடை விதித்தவுடன், தேர்தல் நடத்தவும் தடை விதித்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து நாடாளுமன்றம் கூட்டப்பட்டு, அதிபர் ராஜபக்சே அரசுக்கு எதிராக மும்முறை நம்பிக்கை தீர்மானம் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் ராஜ பக்சேவை பிரதமர் பதவியிலிருந்து விலக்க அதிபர் சிறிசேனா மறுத்து வருகிறார்.

இத்தகைய சூழலில், இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கேவைமீண்டும்நியமிக்க வாய்ப்பில்லை என்று அதிபர் சிறிசேனா தெரிவித்துள்ளார். மேலும் வரும் திங்கட்கிழமை புதிய பிரதமரை அதிபர் சிறிசேனா நியமிக்க உள்ளதாகவும்,தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த செய்தி