ஆப்நகரம்

புதிய கட்டடங்கள் அனுமதிக்கு புதிய நடைமுறை: இலங்கை அரசு தீர்மானம்!

இலங்கையில் புதிதாக கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான அனுமதியை வழங்கும் போதும் புதிய நடைமுறை ஒன்றை முன்னெடுப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது

Samayam Tamil 30 Sep 2020, 9:54 pm
கண்டி மாவட்டத்தின் குண்டசாலை, பன்வில, வத்தேகம உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நில அதிர்வு ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கண்டி – பூவெலிகட பகுதியில் 5 மாடி கட்டடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை மற்றும் அதனுடைய பெற்றோர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இது தொடர்பாக ஆராய 3 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவினர் மேற்கொண்ட விசாரணை அறிக்கை மத்திய மாகாண ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அதன் உரிமையாளர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்

இதனிடையே, சேதமடைந்த நிலையைக்கொண்டதாக கருதப்படும் கட்டங்களை அடையாளம் காண்பதற்கும், புதிதாக கட்டங்களுக்கான அனுமதியை வழங்கும் போதும் புதிய நடைமுறை ஒன்றை முன்னெடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு வவுச்சர்களுக்கு பதிலாக சீருடைகள்!

இதன் முதல் கட்டமாக நிர்மாணிக்கப்படும் கட்டடங்கள் தொடர்பான விவரங்களை கண்டறிவதற்கு உள்ளூராட்சி மன்ற அதிகாரிகளுக்கு புவி சரிதவியல் அகழ்வு பணியகத்தினால் விஷேச பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இடிந்து விழுந்த பெரும்பாலான கட்டடங்கள் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களின் அனுமதியைப் பெற்ற கட்டடங்கள் என அடையாளம் காணப்படிருப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி