ஆப்நகரம்

இலங்கை: கொரோனா மையத்திலிருந்து ஒருவர் தப்பியோட்டம்!

இலங்கையில் கொரோனா மையத்திலிருந்து ஒருவர் தப்பியோடியதால் பொது மக்களுக்கு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 12 Sep 2020, 3:28 pm
வவுனியா - பெரியகாடு ராணுவ முகாம் தனிமைப்படுத்தல் மையத்தில் வெளிநாட்டிலிருந்து விசேஷ விமானத்தில் அழைத்துவரப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்தவர் தப்பியோடியுள்ளார்.
Samayam Tamil covid19


சிலாபம் பகுதியைச் சேர்ந்த நபர் நேற்றிரவு தப்பி ஓடியதாக இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரம் கத்தார் நாட்டிலிருந்து விசேஷ விமானத்தில் அழைத்து வரப்பட்டிருந்த 36 வயதுடைய சிலாபம் மாதம்பே பகுதியைச் சேர்ந்த விஜித்தறுவான் குணவர்த்தன என்ற நபர் தப்பி ஓடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்து உற்பத்தி: இலங்கை அரசு அதிரடி திட்டம்!

அந்த விமானத்தில் அழைத்து வரப்பட்ட பயணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனைகளுக்காக அந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தப்பியோடிய நபரை கைது செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இதுகுறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கர வெடிச்சத்தம்... பீதியில் ஆழ்ந்த யாழ்ப்பாண மக்கள்

கடந்த வாரம் பெரியகாடு ராணுவ தனிமைப்படுத்தல் மையத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி