ஆப்நகரம்

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கடைகள் திறப்பு!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாரத்தில் 2 நாட்கள் கடைகள் திறக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது

Samayam Tamil 27 Oct 2020, 10:06 pm
இலங்கையில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் கம்பஹா மாவட்டத்துக்குட்பட்ட யக்கல, வெலிவேரிய, கனேமுல்ல,வீரகுல, மீரிகம, கிரிந்திவெல, தொம்ப்பே, மல்வத்துஹிரிபிட்டிய, கல்லேவல, பூகொட, நிட்டம்புவ உள்ளிட்ட 16 பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இதையடுத்து, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நகரங்களின் எல்லை வரை பேருந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், பிரதான மார்க்கம், களனி மற்றும் புத்தளம் மார்க்கங்களில் அலுவலக ரயில், தூர சேவை, கடுகதி மற்றும் தபால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு நோய்ப் பரவுவதை தடுப்பதற்கும், நோயாளிகளை அடையாளம் காணும் பிசிஆர் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் கோட்டபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா எதிரொலி: பேருந்து போக்குவரத்து நிறுத்தம்!

இந்த நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாரத்தில் 2 நாட்கள் கடைகள் திறக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை வாரத்தில் 2 நாட்கள் என்ற ரீதியில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையில் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் ஒவ்வொரு திங்கள் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களிலும், கொழும்பு மாவட்டத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களிலும், களுத்துறை மாவட்டத்தில் திங்கள் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களிலும், குருநாகல் மாவட்டத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி