ஆப்நகரம்

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அமைச்சருக்கு நெருக்கடி!

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

Samayam Tamil 4 Jul 2018, 4:10 pm
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
Samayam Tamil vijayakala
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அமைச்சருக்கு நெருக்கடி!


இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், அந்நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டும் என்றால் விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாக வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகம் நடைபெற்ற போது சமூகத்தில் எந்த குற்றமும் நடைபெறவில்லை. அதிபர் மைத்ரிபாலா சிரிசேனாவின் இந்த 3 ஆண்டு கால ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று கூறினார்.

இவரது பேச்சால் இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று கடும் அமளியும் கொந்தளிப்பும் நிலவியது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த, விஜயகலா பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இந்நிலையில் விஜயகலா மகேஸ்வரனை அமைச்சரவை பதவியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு வலியுறுத்தியுள்ளார். இதனையடுத்து அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி