ஆப்நகரம்

இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி

இலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்பணித்தார்.

Samayam Tamil 12 Aug 2018, 6:06 pm
இலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்பணித்தார்.
Samayam Tamil srilanka3
இலங்கை தமிழகர்களுக்கு வீடுகள் அர்பணித்தார் மோடி


கடந்த 2017 மே மாதம், இந்தியப் பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இலங்கை சென்றார். அங்கு இலங்கை தமிழர்களை சந்தித்து அவர்களிடையே மோடி உரையாடினார். இதனை அடுத்து, இலங்கை தமிழர்களுக்கு மொத்தம் 14,000 வீடுகளை கட்டிக்கொடுக்க இந்திய அரசாங்கம் உறுதி பூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்திய மதிப்பில் சுமார் ரூ. 20,000 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கம் ஒட்டு மொத்தமாக 60,000 வீடுகளை இலங்கைக்கு கட்டிக்கொடுக்கப்படவுள்ளன. தற்போது 46,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக அந்நாட்டு பத்திரிக்கைகள் தகவல் தெரிவித்துள்ளன.

இன்று இலங்கையின் நுவாரா எள்ளியா பகுதியில் உள்ள துன்சினானே எஸ்டேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டார். அப்போது அவர், இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை அர்ப்பணித்தார்.

இலங்கை தமிழர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வீடுகள்


அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த வீடுகள் இலங்கை தமிழர்களுக்கு உரிய நேரத்தில் கிடைப்பதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளதாக மோடி தனது உரையில் தெரிவித்தார்.

முன்னதாக ஜூலை மாதம், இலங்கை முழுவதும் அவசர ஆம்புலன்ஸ் வசதியை வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி