இலங்கையின் திருகோணமலை -மிஹிந்தலை காவல் எல்லைக்குட்பட்ட அம்பத்தலாகம பகுதிக்குட்பட்ட வீடு ஒன்றில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலமும், தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமும் இன்று கண்டெடுக்கப்பட்டது.
மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்த 48 வயதுக்குட்பட்ட பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் எல்லவெள பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவரும், சம்பவ இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவு் அவர்கள் தகவல் கூறியுள்ளனர்.
பெண்ணின் கழுத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு, குறிப்பிட்ட ஆணும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குடும்ப வன்முறை... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சாவு
இந்தக் கொலை சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மிஹிந்தலை பகுதியைச் சேர்ந்த 48 வயதுக்குட்பட்ட பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன் எல்லவெள பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவரும், சம்பவ இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவு் அவர்கள் தகவல் கூறியுள்ளனர்.
பெண்ணின் கழுத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு, குறிப்பிட்ட ஆணும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குடும்ப வன்முறை... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சாவு
இந்தக் கொலை சம்பவத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.