ஆப்நகரம்

இலங்கை: நீதிக்கான தேடல் இணையவழி உரையாடல் நிகழ்வு!

இலங்கையில் நீதிக்கான தேடல், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பாக கனடியத் தமிழர் பேரவை இணையவழி நிகழ்வை நடத்தவுள்ளது

Samayam Tamil 7 Feb 2021, 11:15 pm
இலங்கையில் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி பின்னடைவுக்குள்ளாவதால், அதன் அரசியல் நிலைபேறுதன்மை அச்சுறுத்தப்படுகிறது. இதன் விளைவாக மாற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் கணிசமான துன்பத்திலும் வேதனையிலும் உள்ளனர் என்று கனடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
Samayam Tamil இணையவழி உரையாடல்
இணையவழி உரையாடல்


இதனால் இலங்கையில் உள்ள பல்வேறு சமூகங்களின் (சிங்கள, தமிழ், முஸ்லீம், கிறிஸ்தவ, பௌத்த) தலைவர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் சர்வதேச வல்லுநர்களுடன் இணைந்து கலந்துரையாடுவதன் மூலம் இப்பிரச்சினைக்கு நீதியான தீர்வு காண வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ள கனடியத் தமிழர் பேரவை இதற்கான இணையவழி உரையாடல் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, உலகத் தமிழர் பேரவை (GTF), நியூயார்க் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய நீதிக்கும், மனித உரிமைகளுக்குமான நடுவம், இலங்கையில் அமைதிக்கும், நீதிக்குமான பரப்புரையகம் ஆகியவற்றுடன் இணைந்து, கனடியத் தமிழர் பேரவை வருகிற 9ஆம் தேதி “இலங்கையில் நீதிக்கான தேடல், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக உரிமைகள்” என்ற தலைப்பில் இணைய வழி நிகழ்வை நடத்தவுள்ளது.

இந்த நிகழ்வானது, அன்றைய தினத்தன்று இங்கிலாந்தில் பிற்பகல் 1:30 மணி, ஐரோப்பா/தென்னாபிரிக்கா பிற்பகல் 3.30 மணி, இந்தியா/இலங்கையில் பிற்பகல் 7:00 மணி, கனடா/அமெரிக்கா முற்பகல் 8:30 மணி, ஆஸ்திரேலியா முற்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கானல் நீராகும் தமிழர்கள் எதிர்பார்ப்புகள்!

இந்த இணையவழி நிகழ்வில், ஐ.நா சபையின் முன்னாள் உதவிப் பொதுச்செயலாளர் சார்லஸ் பெட்ரி (Charles Petrie), பப்லோ டி கிரேஃப் (Pablo de Greiff), ஸ்டீபன் ஜே. ராப் (Stephen J. Rapp) உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி