ஆப்நகரம்

இலங்கை அரசை கைப்பற்றிய ராஜபக்சே குடும்பம்!

இலங்கை அரசின் முக்கிய தலைமைப் பதவிகளை ராஜபக்சே குடும்பத்தினர் பிடித்துள்ளனர்.

Samayam Tamil 13 Aug 2020, 2:46 pm
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்சே ஆட்சியைப் பிடித்தார்.
Samayam Tamil Rajapaksa


மகிந்த ராஜபக்சேவின் அரசு நேற்று பதவியேற்றது. இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி வகிக்கும் நிலையில், பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலையின் போது அதிபராக பதவி வகித்த ராஜபக்சே தற்போது பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் அவரது குடும்பத்தினர் முக்கிய துறைகளின் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

புதிய நியமனத்திபடி, பாதுகாப்பு அமைச்சர் பதவியை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே தன்வசம் வைத்துக் கொண்டுள்ளார். அமைச்சுப்பொறுப்பில் மகிந்த ராஜபக்சே, நாமல் ராஜபக்சே (மகிந்தவின் மகன்), சமல் ராஜபக்சே (மகிந்தவின் சகோதரர்), சசிந்திர ராஜபக்சே (சமல் ராஜபக்சேவின் மகன்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராஜபக்சேவுக்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி

இவைதவிர, மஹிந்த ராஜபக்சேவின் சகோதரியின் மகன் நிபுண ரணவக்க (நாடாளுமன்ற உறுப்பினர்) நேற்று மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

Donald Trump: இந்தியர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன ட்ரம்ப்; வாக்குகளை அள்ளுமா H-1B அறிவிப்பு?

அமைச்சரவையில் டக்ளஸ் தேவானந்தா, அலி சப்ரி, சதாசிவம் வியாழேந்திரன், தொண்டைமான் ஆகிய நான்கு தமிழர்களும் இடம் பெற்றுள்ளனர்.

அடுத்த செய்தி