ஆப்நகரம்

பிச்சையெடுக்க தடை; பிச்சைகாரர்களுக்கு மறுவாழ்வு; இலங்கை அதிரடி

புத்தாண்டு முதல் கொழும்பு நகரில் பிச்சைஎடுக்கக் கூடாது என்றும் பிச்சைகாரர்களுக்கு மறுவாழ்வு அளித்தும் இலங்கை அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

TNN 21 Dec 2017, 3:40 am
புத்தாண்டு முதல் கொழும்பு நகரில் பிச்சைஎடுக்கக் கூடாது என்றும் பிச்சைகாரர்களுக்கு மறுவாழ்வு அளித்தும் இலங்கை அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Samayam Tamil sri lanka bans begging in capital from newyear
பிச்சையெடுக்க தடை; பிச்சைகாரர்களுக்கு மறுவாழ்வு; இலங்கை அதிரடி


இது குறித்து இலங்கை நகர்ப்புற அமைச்சர் சம்பிகா கூறுகையில், பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்காக, வரும் 2018 ஜனவரி 1 தேதி முதல் பிச்சையெடுத்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்பு நகரிலும், நகர்புறத்தைச் சுற்றிலும் பிச்சை எடுத்தால் அது சட்டவிரோதம் என்றும் தெரிவித்தார்.

மேலும், பிச்சைக்காரர்கள் அனைவரையும் அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்படுவார்கள், அவர்களுக்கு ஏற்ற வாழ்வாதார வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்றும் பிச்சை எடுக்கும் சிறுவர்கள் பள்ளியில் சேர்க்கப்படுவார்கள் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி