ஆப்நகரம்

Sri Lanka Serial Blasts: இலங்கையில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு? - தொடரும் பதற்றம்

இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று மேலும் ஒரு குண்டு வெடித்துள்ள செய்தி மக்களை பதற்றத்தோடு நிலை குழைய வைத்துள்ளது.

Samayam Tamil 25 Apr 2019, 11:50 am
இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று மேலும் ஒரு குண்டு வெடித்துள்ள செய்தி மக்களை பதற்றத்தோடு நிலைகுழைய வைத்துள்ளது.
Samayam Tamil Srilanka Blast


இலங்கையின் ஈஸ்டர் பண்டியை கொண்டாடப்பட்ட (ஞாயிறு கிழமை) நாளில் கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளில் 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் சிக்கி இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவை சேர்ந்த 10 பேரும், 35 வெளிநாட்டினரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டனர்.



இந்த கொடூர தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதில் 9 பேர் மனித வெடிகுண்டுகளாக பயன்டுத்தப்பட்டுள்ளனர்.



இந்த சம்பவத்திற்கு பின்னர் நாடுமுழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பையும் மீறி இன்று ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொழும்புவிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள புகோடா நகரில் உள்ள நீதிமன்றத்தின் பின்புறம் பலத்த வெடி சப்தம் கேட்டதாக அங்கிருந்த பொதுமக்களும் போலீஸாரும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீ சாரும் வெடிகுண்டு நிபுணர்களும் அங்கு விரைந்துள்ளனர்.

அடுத்த செய்தி