ஆப்நகரம்

வர்த்தக வருமானத்தை அதிகரிக்க சீனாவுக்கு இலங்கை கோரிக்கை

வர்த்தக வருமானத்தை அதிகரிக்க சந்தை அணுகலை எளிதாக்குமாறு சீனாவுக்கு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது

Samayam Tamil 11 Oct 2020, 6:55 pm
அண்டை உறவுகளை வலுப்படுத்துவதிலான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் யங் ஜீச்சி, சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகவரின் தலைவர், சீன வெளிநாட்டு அமைச்சின் அதிகாரி ஆகியோரை உள்ளடக்கிய சீனத் தூதுக்குழுவானது இலங்கைக்கு வந்துள்ளது.
Samayam Tamil இலங்கை - சீனா பேச்சுவார்த்தை
இலங்கை - சீனா பேச்சுவார்த்தை


வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, அரசாங்கத்தின் ஏனைய அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்களின் முன்னிலையில் சீன தூதுக்குழுவினர் அதிபர் கோட்டபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோரிடம் கலந்துரையாடினர்.

அப்போது, வர்த்தக வருமானத்தை அதிகரிப்பதற்காகவும், சீனாவுக்கு ஆதரவான வர்த்தக சமநிலையை மேம்படுத்துவதற்காகவும், சீன உள்நாட்டு சந்தையில் கேள்வி நிலவக்கூடிய இலங்கையின் சில தனித்துவமான பொருட்களுக்கான சந்தை அணுகலை எளிதாக்குமாறு சீனத் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கொரோனா: இலங்கை வாழ் இந்துக்களுக்கு அரசின் முக்கிய அறிவிப்பு!

மேலும், வர்த்தக அளவை அதிகரிப்பதற்காக சீனாவிற்கான ஏற்றுமதி நிலைமை மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும், இலங்கை - சீனா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இரு தரப்பும் ஒப்புக் கொண்டது.

இலங்கையில் 3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான சீனாவின் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள், அதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் அக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

கொரோனா தொற்றின் போது, சீன அரசாங்கத்தால் தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்ற மதிப்புமிக்க உதவி மற்றும் ஆதரவுகளுக்காக தூதுக்குழுவிரிடம் தனது நன்றிகளை ஆதிபர் கோட்டபய ராஜபக்சே அப்போது தெரிவித்தார்.

அடுத்த செய்தி