ஆப்நகரம்

மூன்று வாரத்தில் ரூ.42 கோடி வருமானம்!

இலங்கை வந்த சுற்றுலாப் பயணிகள் மூலம் சுமார் ரூ.42 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 17 Jan 2021, 7:07 pm
உலகின் சிறந்த சுற்றுலா நாடான இலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மார்ச் மாதம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. நடப்பாண்டில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மட்டும் சுமார் 4 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்தனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


ஆனால், கொரோனா காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து இலங்கை சுற்றுலாத்துறை பெருமளவு முடங்கியது. அந்த துறையை நம்பி இருப்பவர்கள் வாழ்வாதாரம் இழந்தனர். இலங்கைக்கு சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருமானமும் முடங்கியது.

இதையடுத்து, கடந்த மாத இறுதியில் சுற்றுலாப்பயணிகளுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கியது. இதனைத்தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை வரை 1500க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் 9 விமானங்களின் மூலம் இலங்கை வந்தனர். அதில், சிலர் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பி விட்டனர்.

அவ்வாறு சொந்த நாடுகளுக்கு சென்றவர்கள் குறைந்தபட்சம் இலங்கையில் 10 நாட்கள் தங்கி இருந்துள்ளனர். அவர்கள் ஹோட்டல் அறைக்காக நாளொன்றுக்கு 125-150 அமெரிக்க டாலர்கள் வரை செலவிட்டுள்ளனர். மேலும் வேறு சில இடங்களுக்கு என்று பொருட்கள் வாங்குகையில் சுமார் 100 டாலர்களுக்கும் அதிகமாக செலவிட்டுள்ளனர்.

தமிழர் இடத்தில் தங்கப் புதையல் கண்டுபிடிப்பு!

இந்த நிலையில், கடந்த மூன்று வார காலப்பகுதியில் இந்த சுற்றுலாப் பயணிகள் மூலம் ரூ.42 கோடி வருமானம் கிடைத்துள்ளதாகவும், சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வரும் வேலைத்திட்டம் வெற்றியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி