ஆப்நகரம்

இந்திய உளவு அமைப்பு மீதான குற்றச்சாட்டுக்கு இலங்கை அரசே மறுப்பு

இந்தியாவைச் சோ்ந்த ரா உளவு அமைப்பு தன்னை கொலை செய்ய திட்டமிட்டதாக அதிபா் சிறிசேனா கூறவில்லை என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.

Samayam Tamil 17 Oct 2018, 1:07 pm
இந்தியாவின் ரா உளவு அமைப்பைச் சோ்ந்த நபா் கைது செய்யப்பட்ட நிலையில் இந்தியா – இலங்கை உறவை சீா்குலைக்க சிலா் முயற்சிப்பதாகவே அதிபா் சிறிசேனா கூறியதாக இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.
Samayam Tamil Sirisena


இலங்கையில் நடைபெறும் வாராந்திர அமைச்சரவை கூட்டம் கொழும்பு பகுதியில் நேற்று (செவ்வாய்க் கிழமை) நடைபெற்றது. இதில் அந்நாட்டு அதிபா் மைத்ரிபால சிறிசேனா கலந்து கொண்டாா். கூட்டத்தில், இந்தியாவின் ரா உளவு அமைப்பைச் சோ்ந்த நபா் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக அதிபா் சிறிசேனா பேசியதாக தகவல் வெளியானது.

அதிபரின் பகிரங்க குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இலங்கை அரசே இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்ட அதிபா் சிறிசேனா இதுபோன்று கூறவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக செயல்பட்ட நபா் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவா் இந்தியாவின் ரா அமைப்பைச் சோ்ந்தவா். இதை வைத்து இரு நாட்டு உறவில் பிளவு ஏற்படுத்த சிலா் முயற்சிப்பதாக தான் அவா் கூறினாா் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி