ஆப்நகரம்

ஊரடங்கில் அடுத்தகட்ட தளர்வு: அரசு அறிவிப்பு!

இலங்கையில் ஜனவரி மாதம் முதல் தூர சேவை பேருந்துகளை வழக்கம் போல் செயல்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 30 Dec 2020, 1:03 pm
கொரோனா பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இலங்கையில் பேருந்துகள் இயக்கப்படுவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Samayam Tamil srilanka bus


ஜனவரி முதல் தூர சேவை பேருந்துகளை வழக்கம் போல் செயல்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்துமாறு பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிராண்டா குறிப்பிட்டுள்ளார்.

புதிய கொரோனா... இலங்கைக்கு வந்த சுற்றுலாப்பயணிகள்-என்ன சொல்கிறார் அமைச்சர்!
ஏற்கனவே, தமது ஆணைக்குழுவின் அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத சுமார் 10 பஸ்களை கைப்பற்றியதாக அவர் சுட்டிக்காட்டினார். வரும் நாட்களிலும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத பேருந்துகளின் அனுமதிப் பத்திரத்தையும் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இதனிடையே, எதிர்வரும் ஜனவரி முதல் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையும் குறிப்பிட்டுள்ளது.

எடப்பாடிக்கு டெல்லி கொடுத்த ஷாக்: நிர்மலா முதல்வர் வேட்பாளரா?

இருக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு பேருந்து ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இருப்பினும், தூர சேவை ரயில் பயணங்கள் இடம்பெற மாட்டாது என ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.

அடுத்த செய்தி