ஆப்நகரம்

பருவமழை ஆபத்து; எலி காய்ச்சலால் 1,574 பேர் பாதிப்பு; இலங்கை சுகாதாரத்துறை எச்சரிக்கை!

மழைக்காலத்தை ஒட்டி, எலி காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 10 Jun 2018, 1:05 pm
கொழும்பு: மழைக்காலத்தை ஒட்டி, எலி காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.
Samayam Tamil Rat Fever
இலங்கையில் எலி காய்ச்சல்


இலங்கையில் பருவமழை சீசன் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம் மழைக்கால வானிலையால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படக்கூடும்.

இந்நிலையில் இலங்கையில் எலி காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. நடப்பாண்டில் ஜூன் மாதம் வரை 1,574 பேர், எலி காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த காய்ச்சலால் கம்பாஹா, கலுதாரா, கல்லே, மதாரா, ரத்னபுரா, மொனெரஜலா ஆகிய 5 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மற்றும் கேகல்லெவில் முறையே 92, 97 பேர் எலி காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளனர்.

ஜூன் மாதத்தில் மட்டும் 49 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். நோய் பாதித்த விலங்குகளின் சிறுநீர் மூலம் எலி காய்ச்சல் பரவுகிறது. இதற்கு டாக்ஸிசைலின் என்ற மருந்து பயன்படுத்தப்படுகிறது.

பருவமழை தொடங்கியுள்ளதால், எலி காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சுகாதாரத்துடன் இருக்குமாறு, இலங்கை சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Sri Lanka health authorities warn of rat fever spreading.

அடுத்த செய்தி